ஆயுத பூஜையை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி மற்றும் 1-ம் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அதனால் கடலூர் மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரமான பரங்கிப்பேட்டையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு சென்று வர இதுவரை ஒரு சிறப்பு பஸ்கள் கூட இயக்கப்படாததால், ஏராளமான மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதனால் அவர்கள் கடலூர் அல்லது சிதம்பரம் சென்று தான் சிறப்பு பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆகவே பரங்கிப்பேட்டையில் இருந்து வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.