கடலூரில் இருந்து சாமியார்பேட்டை, பரங்கிப்பேட்டை வழியாக பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு பஸ் இயக்கப்பட்டது. இதனால் கடலூர், பரங்கிப்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயனடைந்து வந்தனர். இந்த பஸ் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகின்றனர். எனவே, கடலூரில் இருந்து பிச்சாவரம் சுற்றுலா மையத்திற்கு பரங்கிப்பேட்டை வழியாக அரசு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.