பாலத்திற்கு அடியில் வேகத்தடைகள்

Update: 2022-09-25 10:48 GMT

பாலத்திற்கு அடியில் வேகத்தடைகள்

சில வருடங்களுக்கு முன்பு தாராபுரம் பஸ்நிலையம் அருகே புதிய மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது.அதன் அடியில் சர்வீஸ் ரோடு ஒன்று அமைக்கப்பட்டு பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் சென்றுவர வழிசெய்யப்பட்டது. இந்த நிலையில் தென்மாவட்டங்கள், கரூர், பழனி போன்ற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பஸ்நிலையத்திற்குள் நுழையும் போது எதிரே சர்வீஸ் ரோட்டில் வரும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பல வாகனங்கள் சேதம் அடைந்துள்ளதோடு வாகன ஓட்டிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் சேதம் அடைந்து நஷ்டம் ஏற்படுகிறது. இதுபோன்ற விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்படும் முன் தாராபுரம் பஸ்நிலையம் முன்பு பாலத்திற்கு அடியில் செல்லும் சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் வேகத்தடைகள்(ஸ்பீடுபிரேக்குகள்) அமைக்க வேண்டும்.

பழனி,தாராபுரம்,

9842412181

மேலும் செய்திகள்

பஸ் வசதி