போக்குவரத்துக்கு இடையூறாக கருவேலமரங்கள்

Update: 2022-07-14 13:28 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் முதல் பூம்புகார் வரை சாலையோரத்தில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றின் கிளைகள் நன்கு வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை மறைத்தபடி இருக்கின்றன.இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளின் முகத்தை அடிக்கடி பதம்பார்த்து விடுகின்றன. மேலும், கருவேல மரங்கள் காடுபோல் காட்சி அளிப்பதால் அதிலிருந்து வெளியேறும் விஷப்பூச்சிகள் சாலையில் நடந்து செல்பவர்களை கடித்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்