வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த கோரிக்கை

Update: 2022-09-24 14:31 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதிக்கு தினமும் பல தனியார் கல்லூரி பஸ்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் ஒரு சில தனியார் கல்லூரி பஸ்கள் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகத்தில் செல்கின்றன. இதனால் அரவக்குறிச்சி பகுதியில் சாலையில் நடந்து செல்வோர் விபத்து ஏற்பட்டு விடுமோ என அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்