மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பைபாஸ் சாலையை விரிவுபடுத்தும் பணி நடந்து. வருகிறது. இதற்காக எடமணல் பகுதி ஆமப்பள்ளம் கிராமத்தில் இருந்து சீர்காழி பைபாஸ் சாலைக்கு லாரிகளில் மண் எடுத்து செல்லப்படுகிறது. இந்த லாரிகள் சாலையில் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சதுடன் சாலையை கடந்து செல்கின்றனர். மேலும் லாரியில் மண் தார்ப்பாய் கொண்டு மூடப்படாமல் எடுத்து செல்லப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லாரிகள் முறையாக விதிகளை கடைபிடித்து மண் எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?