தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2022-09-22 10:14 GMT

பண்ருட்டி காந்தி ரோட்டில் இருபுறமும் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த சாலையில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. ஆகவே சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி