பயணிகள் நிழற்குடை இல்லை

Update: 2022-09-21 13:12 GMT

பயணிகள் நிழற்குடை இல்லை

திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு பயணிகள் நிழற்குடை இல்லாததால் நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் பஸ்சுக்காக மரத்தடியில் நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. வெயில் வரும் நேரத்தில் ஒதுங்க முடியாமல் வெயிலிலேயே நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது.

மழைக்காலத்தில் மழையில் நனைந்து கொண்டே நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அரசு மருத்துவக்கல்லூரி முன்பு பயணிகள் நிழற்குைட அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

விக்னேஷ்வேலு,திருப்பூர்.

9942111770

மேலும் செய்திகள்

பஸ் வசதி