கடும் நடவடிக்கை தேவை

Update: 2022-09-21 12:15 GMT
கிருஷ்ணகிரி நகரில் 5 ரோடு ரவுண்டானாவில் இருந்து பழைய சப் ஜெயில் சாலை மற்றும் சேலம் சாலை செல்கின்றன. இந்த சாலைகள் 2-ம் ஒருவழிப்பாதை சாலைகள் ஆகும். ஆனால் இந்த சாலையில் எதிர்திசைகளில் வாகனங்கள் வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன . குறிப்பாக ஐந்து ரோடு சிக்னல் அருகே ஒருவழிப் பாதையில் எதிர்திசையில் பலரும் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்து விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள். எனவே இந்த 2 சாலைகளிலும் போக்குவரத்து போலீசார் கண்காணித்து ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை எதிர்திசையில் ஓட்டி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி