பெரம்பலூர் நகர் பகுதியில் இளைஞர்களில் சிலர் ஆபத்தை உணராமல் தங்களது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வருகின்றனர். அவர்கள் ஹெல்மெட்டும் அணிவதில்லை. அவர்களின் செயல் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து போலீசார், மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்லும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.