கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் மின்னல் வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் அதிக வெளிச்சம் அளிக்கக்கூடிய விளக்குகள் பயன்படுத்துவதினால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண்கள் கூசுகிறது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தினந்தோறும் அவதியுற்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.