விபத்து அபாயம்

Update: 2022-09-20 09:42 GMT

தோட்டியோட்டில் இருந்து திங்கள்நகர் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் பேயன்குழி ஊரில் அரசு உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி நெடுஞ்சாலை அருகில் உள்ளதால் மாணவர்கள் காலையும், மாலையும் சாலையை கடந்து தான் பள்ளிக்கு செல்ல முடியும். ஆனால் பள்ளி அருகில் சாலையின் இருபுறமும் எந்த வித எச்சரிக்கை பலகையும் இல்லாததால் வேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் சாலையில் இருபுறமும் எச்சரிக்கை பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி