பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-19 15:14 GMT
அரியலூர் மாவட்டம், காசான்கோட்டை, சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான் வழியாக அரியலூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதனால் மாணவ-மாணவிகள், கூலி தொழிலாளிகள் அதனை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் கடந்த பல மாதங்களாக அரசு பஸ் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கும்பகோணத்தில் இருந்து அரியலூர் வரை மேற்கண்ட பகுதி வழியாக அரசு பஸ் தினமும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி