மஞ்சூர் பஜார் பகுதியில் சாலையின் இருபுறமும் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன. எனவே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.