அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் முத்துவாஞ்சேரி சாலையில் சிமெண்டு லாரிகள், நிலக்கரியை ஏற்றிச் செல்லும் லாரிகள், டேங்கர் லாரிகள் என பல்வேறு வகையான லாரிகளும் முதன்மை சாலையிலே நீண்ட நேரமாக நிறுத்தி விடுவதால் அப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள், 108 ஆம்புலன்ஸ் மற்றும் இவ்வழியே செல்லும் பஸ்கள் என அனைத்தும் போக்குவரத்து இடர்பாடுகளில் சிக்கித்தவிக்கிறது. இதோடு இல்லாமல் இரவு நேரங்களிலும் கனரக லாரிகளை விக்கிரமங்கலம் செல்லும் முதன்மை சாலை நிறுத்திவிட்டு டிரைவர்கள் எங்கேயாவது சென்று விடுகிறார்கள். இதனால் வி.கைகாட்டியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.