அரியலூர் மாவட்டம், காவனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கா. அம்பாபூர் கிராமத்தில் தினமும் அதிகாலையில் 6 மணிக்கு அரியலூர் -நெடுவலூர் பஸ் ஒன்று கா.அம்பாபூர் வழியாக இயக்கப்பட்டு வந்தது. அந்த பஸ்சில் தான் அதிகாலையில் வேலைக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பயணம் செய்து வந்தனர். ஆனால் கொரோனா காலத்தில் அந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. பஸ் நின்று போனதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் விளாங்குடிக்கு நடந்து சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.