கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-16 14:09 GMT

கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பள்ளிக்கு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் அரசு டவுன் பஸ்களில் வந்து செல்கிறார்கள். ஆனால் போதுமான எண்ணிக்கையில் பஸ்கள் இல்லாததால் மாணவர்கள் பஸ் படிகட்டுகளில் தொங்கிய படி ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். குறிப்பாக காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி அணை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களில் அதிகளவில் கூட்டம் காணப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வினோத், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்