ஆபத்தான பயணம்

Update: 2022-09-16 13:03 GMT
செங்கோட்டையில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை நேரங்களில் பஸ்களில் வரும் மாணவர்கள், பஸ்சுக்குள் நிற்பதற்கு போதிய இடம் இருந்தாலும் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, புளியரை, தெற்கு மேடு, கடையநல்லூர், சுரண்டை செல்லும் பஸ்களில் இந்த நிலை உள்ளது. எனவே மாணவர்கள் பஸ் படிக்கட்டில் நின்று பயணிப்பதை தடுப்பதுடன், பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி