கடலூரில் இருந்து கோவைக்கு விருத்தாசலம், சேலம் வழியாக புதிய ரெயில் இயக்க வேண்டும். இதன் மூலம் கடலூர் மாநகரம், சிப்காட், புதுச்சேரி, சிதம்பரம், வடலூர், நெய்வேலி பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். அதோடு வடலூர் சத்தியஞான சபைக்கு வரும் பக்தர்கள், அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இந்த ரெயில் சேவை பேருதவியாக அமையும். எனவே இந்த ரெயில்வே திட்டத்தை அரசு பரீசிலிக்க வேண்டும்.