நடவடிக்கை தேவை

Update: 2022-09-15 14:01 GMT

நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், முக்கிய சந்திப்பு பகுதியான செட்டிகுளத்தில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், அலுவலக பணியாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, காலை, மாலை நேரங்களில் அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் அதிகளவில் பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.எஸ்.ராஜன், வைத்தியநாதபுரம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி