பயணியர் நிழல்குடையை சுத்தம் செய்ய வேண்டும்

Update: 2022-09-15 13:28 GMT
கருர் மாவட்டம், புன்னம் சத்திரம் தார் சாலை ஓரத்தில் அப்பகுதி பொதுமக்களின் நலன்கருதி பயணிகள் பயணியர் நிழல்குடை கட்டப்பட்டது. பஸ்களுக்கு செல்லும் பயணிகள் இந்த பயணியர் நிழல்குடையில் அமர்ந்திருந்து பஸ்களில் சென்று வருகின்றனர். அதேபோல் மழை, வெயில் காலங்களிலும் அந்த வழியாக செல்வோர் இந்த பயணியர் நிழல்குடையில் அமர்ந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் நிழல்குடை முழுவதும் குப்பை, கூலங்களாகவும், தண்ணீர் பாட்டில்கள், தண்ணீர் பாக்கெட் மற்றும் பல்வேறு கழிவுகள் கிடக்கிறது .இதனால் பயணிகள் அறுவருப்புடன் அங்கு செல்ல தயங்குகின்றனர். மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்திவிட்டு மது பாட்டில்களையும், தண்ணீர் பட்டில்களையும், தண்ணீர் பாக்கெட்டுகளையும் அங்கேயே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் தூய்மையின்றி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணியர் நிழல்குடையை தூய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்