கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

Update: 2022-09-15 13:26 GMT
புதுக்கோட்டையில் இருந்து பெருங்குடி , முனசந்தை , செங்கீரை வழியாக ராயவரத்திற்கு காலை நேரத்தில் ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த பஸ் ராயவரத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு சென்று வர சுமார் 1.30 மணி நேரம் கால இடைவெளி ஏற்பட்டு வருகிறது. இதனால் காலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே புதுக்கோட்டையில் இருந்து ராயவத்திற்கு காலை நேரத்தில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்