சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு தினசரி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிலையத்தில் போதிய இட வசதியின்றி பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும்.