மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து திருமுல்லைவாசல் பகுதிக்கு தினமும் ஏராளமானோர் பல்வேறு பணிகளுக்காக சென்று வருகின்றனர். இதேபோல் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் தினமும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் போதிய பஸ் வசதியில்லை. இதனால் சில நேரங்களில் பஸ்களில் படிகட்டுகளில் தொங்கிய நிலையில் ஆபத்தான பயணம் செய்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.