போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-14 14:48 GMT
அரியலூர் மாவட்டம், மின்நகர் பகுதியில் அரியலூர்-கள்ளங்குறிச்சி செல்லும் சாலை ஓரத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதினால், இந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் மற்றும் இப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்