கரூர் மாவட்டம், தரகம்பட்டியில் இருந்து சென்னைக்கு சென்று வந்த அரசு பஸ் கடந்த 2 ஆண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சென்னைக்கு செல்ல வேண்டும் என்றால் திருச்சி சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.