இடிந்து கிடக்கும் பயணிகள் நிழற்குடை

Update: 2022-09-13 10:44 GMT
திண்டிவனம் அடுத்த வேம்பூண்டி கிராமம், சென்னை-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள பயணிகள் நிழற்குடை பாழடைந்து இடிந்து விழுந்துள்ளது. மேலும் அதனை சுற்றிலும் செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளதால் பயணிகள் நிழற்குடை இருந்த இடமே தெரியாத அளவிற்கு புதர் மண்டி கிடக்கிறது. இதனால் இங்கு வரும் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே பயணிகள் நலன்கருதி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்