சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்

Update: 2022-09-12 14:05 GMT

திருவாரூர் முக்கிய வீதிகளில் உள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை தள்ளிவிடுகின்றன. இதனால் வாகனங்கள் சேதமடைகின்றன. மேலும், இரவு நேரங்களில் சாலையில் படுத்துக்கொள்கின்றன. இதன்காரணமாக வாகனங்கள் மாடுகள் மீது மோதி வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்