பஸ் நின்று செல்ல நடவடிக்கை தேவை

Update: 2022-09-12 13:48 GMT


கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள காந்தி சிலை அருகே திருச்சி - கரூர் செல்லும் சாலையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நதியில் இருந்து ரூ.8 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் பாதுகாப்பாக நின்று பஸ்சில் பயணம் செய்யும் வகையில் கட்டப்பட்ட இந்த பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் திருச்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள் நின்று செல்ல வேண்டும். ஆனால் இந்த நிழற்குடை பகுதியில் எந்த பஸ்களும் நிற்பதில்லை. அதற்கு மாறாக பஸ் நிலையம் எதிரே உள்ள சாலையோரம் பஸ்கள் நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றி இறக்கி விடப்படுகின்றனர். இதனால் ரூ.8 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை பயனற்று பலர் இளைப்பாறும் இடமாக மாறிவிட்டது. எனவே இந்தப் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டுமே பஸ்களை நிறுத்திச் செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி