மயிலாடுதுறை மாவட்ட திருமணஞ்சேரி கோவிலுக்கு ஒரு அரசுபஸ் இயக்கப்பட்டு வருகிறது இந்த பஸ் அடிக்கடி பழுதாகிறது. மேலும் கடந்த சில நாட்களாக சரிவர வருவதில்லை ஆகையால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திருமணஞ்சேரி