உயர்த்தப்பட்ட பஸ் கட்டணம்

Update: 2022-09-12 12:14 GMT

தென்காசி மாவட்டம் புளியங்குடி- ராயகிரி இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் (தடம் எண்:- 40சி) சுப்பிரமணியபுரத்துக்கு வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணம் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோன்று வாசுதேவநல்லூர்- தென்காசி இடையே இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சிலும் (தடம் எண்:- 44 பி) கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அரசு நிர்ணயித்த வழக்கமான கட்டணத்தையே பஸ்களில் வசூலிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி