திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம், உத்தமர்கோவில், திருவெள்ளரை, அன்பில் ஆகிய ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்கள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதாகும். இதில் ஶ்ரீரங்கத்திற்கு வந்து செல்லும் பக்தர்கள் அருகில் உள்ள மேற்கண்ட ஸ்தலங்களுக்கு செல்வதற்கு ஶ்ரீரங்கத்திலிருந்து பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஶ்ரீரங்கத்திலிருந்து மற்ற ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கும், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஶ்ரீரங்கம் வழியாக சமயபுரத்திற்கும், மறுமார்க்கமாக சமயபுரத்திலிருந்து ஶ்ரீரங்கம் வழியாகவும் செல்வதற்கு நகரப்பேருந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.