நின்று செல்ல வேண்டும்

Update: 2022-09-10 13:49 GMT


மயிலாடுதுறை பஸ் நிலையத்திற்கு பூம்புகார், மணல்மேடு, வைத்தீஸ்வரன் கோவில் மாப்படுகை வழியாக வரும் பஸ்கள் அனைத்தும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரி நிறுத்தத்தில்  இறக்கி விட்டு , பஸ் நிலையம் செல்லும். இந்த நிலையில் தற்போது பெரும்பாலான பஸ்கள் பயணிகளை காவிரி பாலத்தில் இறக்கிவிடுகின்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,மயிலாடுதுறை

மேலும் செய்திகள்

பஸ் வசதி