திருச்சி மாவட்டம், கல்லணையில் இருந்து வேங்கூர் புத்தாபுரம், காந்திபுரம், வண்டிப்பாதை, ஒட்டக்குடி, கீழமுல்லக்குடி, சர்க்கார்பாளையம், பனையக்குறிச்சி ஆகிய கிராமங்கள் வழியாக சத்திரம் வரை காலை, மாலை நேரங்களில் குறைந்த அளவிலான அரசு பஸ்கள் இயக்கப்படுவதினால் மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.