அந்தியூரில் இருந்து கொங்காடை மலை கிராமத்துக்கு ஒரே ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து நடந்ததால் அந்த பஸ் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறாா்கள். எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி அந்தியூரில் இருந்து கொங்காடை மலை கிராமத்துக்கு வேறு பஸ் இயக்க வேண்டும்.