பஸ் வசதி வேண்டும்

Update: 2022-09-08 11:18 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கோட்டியால் கிராமத்தில் இப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து மாணவ-மாணவிகள் கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஆனால் இந்த கிராமத்தில் முறையான பஸ் வசதி இல்லை. இதனால் இங்குள்ள பெற்றோர் தங்களது குழந்தைகளை 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தா.பழூரில் கொண்டு சென்று விட்டு வருகின்றனர். அங்கிருந்து மாணவர்கள் பஸ் மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். எனவே கோட்டியால் கிராமத்திற்கு சுத்தமல்லி மற்றும் தா.பழூர் வழியாக டவுன்பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்