அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும்

Update: 2022-09-08 10:29 GMT

காங்கயம் தாலுகா வெள்ளகோவில் இருந்து அக்கரைபாளையம் வழியாக மூலனூருக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.இந்த பஸ்களை நம்பி ஏராளமான ெபாதுமக்கள் பயணம் செய்கிறார்கள். ஆனால் இந்த வழி தடத்தில் பஸ்கள் முறையாக இயக்கப்படுவது இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இரவு நேரத்தில் வேலைக்கு சென்று வருபவர்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைகிறார்கள். எனவே வெள்ளகோவில்-மூலனூர் வழித்தடத்தில் அரசு பஸ்கள்முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்