போக்குவரத்து நெரிசல்

Update: 2022-09-07 14:00 GMT

கரூர் நகரின் மைய பகுதியான ஜவகர்பஜாரில் தாலுகா அலுவலகம், கிளை சிறை, தீயணைப்பு நிலையம், தலைமை தபால் அலுவலகம், ஜவுளிக்கடைகள், நகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பல்வேறு பொருட்களை பொதுமக்கள் வாங்க இப்பகுதிக்கு வருகின்றனர். பெரும்பாலும் இருசக்கர வாகனத்தில் வரும் பொதுமக்கள், வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகிறது. இதனால் ஜவகர்பஜார் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே கரூர் ஜவகர்பஜார் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்களை சாலையின் ஓரத்தில் முறைப்படி நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்