அதிக கற்களை ஏற்றி செல்லும் லாரிகளால் விபத்து

Update: 2022-09-07 13:59 GMT

கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு கற்கள் அனுப்பப்பட்டு வருகிறது.இந் நிலையில் லாரியில் அதிக அளவு பெரிய கற்களை பாடி மட்டத்திற்கு மேல் ஏற்றி செல்லும் போது லாரிகள் அதிவேகத்தில் செல்லும்போது லாரியின் பாடி மட்டத்திற்கு மேல் உள்ள கற்கள் தார் சாலையில் விழுந்து செல்கின்றன .லாரிக்கு பின்னால் வரும் வாகனங்களின் மீது கற்கள் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி