கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2022-09-06 15:43 GMT

தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் பல மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்து தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து டவுன் பஸ்கள் மூலம் தினமும் கல்லூரிக்கு சென்று வருகிறார்கள். ஆனால் போதுமான டவுன் பஸ்கள் இல்லாததால் பஸ்சில் தொங்கியபடி மாணவர்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கல்லூரி நேரங்களில் கூடுதல் டவுன் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ், தர்மபுரி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி