பஸ் வசதியின்றி மக்கள் அவதி

Update: 2022-09-06 14:54 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தின் மேற்குப் பகுதியான திருபுரந்தான், அருள்மொழி, காசான்கோட்டை, புதுப்பாளையம், அறங்கோட்டை, கோவிந்தபுத்தூர், சாத்தாம்பாடி, முத்துவாஞ்சேரி ஆகிய கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் கும்பகோணத்திற்கு ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகளும், பொதுமக்களும் தினசரி செல்கின்றனர்.ஆனால் இப்பகுதிக்கு சரியான முறையில் பஸ் வசதி இல்லை. தினசரி காரைக்குறிச்சி வரை ஜெயங்கொண்டம் பஸ்சில் சென்று அங்கிருந்து மற்றொரு பஸ்சில் கும்பகோணம் செல்லும் சூழல் உள்ளது. சில நேரங்களில் காரைக்குறிச்சியில் ஜெயங்கொண்டம் முதல் கும்பகோணம் வரை செல்லும் பஸ்கள் கூட்டநெரிசல் காரணமாக நிற்காமல் சென்று விடுகின்றன. அப்போது பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்