போக்குவரத்துக்கு இடையூராக கால்நடைகள்

Update: 2022-09-06 14:26 GMT


திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி இரவு நேரங்களில் கால்நடைகள் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கொரடாச்சேரி

மேலும் செய்திகள்