மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு மெயின் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இந்த சாலை வழியாக தினமும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பெண்கள் அதிகளவில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் சாலையோரத்தில் அமைந்திருக்கும் மதுக்கடைக்கு மது அருந்த வருபவர்கள் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதன்காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?