அபாய நிலையில் வால்வு தொட்டி
திருப்பூர் பி.என்.ரோடு கூத்தம்பாளையம் பிரிவு பி.ஆர்.ஜி. திருமண மண்டபத்திலிருந்து சோழன்நகர் செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் வால்வு உள்ள தொட்டியின் சுற்றுச்சுவர் இடிந்து அபாயகரமான நிலையில் உள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இப்பகுதியில் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன. விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த சுற்றுச்சுவரை உடனே சீரமைத்து தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சி.சுப்பிரமணியம்,கூத்தம்பாளையம் பிரிவு.
9047083399