கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

Update: 2022-09-04 13:21 GMT
அரியலூரில் இருந்து விக்கிரமங்கலம் வழியாக ஸ்ரீபுரந்தான் வரை தினந்தோறும் அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கூடுதல் பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பதால் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் ஸ்ரீபுரந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளிலிருந்து அரியலூர் நகருக்கு அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ் கூட்ட நெரிசலில் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அரியலூரில் இருந்து ஸ்ரீபுரந்தான் வழித்தடத்தில் கூடுதலாக பஸ்களை இயக்கி மக்களின் சிரமங்களை போக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி