வடிகால் பணிகள் தொடங்குமா?

Update: 2022-09-02 12:19 GMT

கோவை மாநகராட்சி 35-வது வார்டு இடையர்பாளையம் வடவள்ளி சாலையில் புதிய மழைநீர் வடிகால் அமைக்க குழி தோண்டி பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. தற்போது மழை பெய்து வருவதால், அந்த குழியில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் மண் சரிந்து குழி மூடி வருகிறது. இது தவிர அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அந்த வழியாக சென்று வரும் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே பணிகளை உடனே தொடங்கி விரைந்து முடிக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்