அந்தியூர் அருகே அண்ணா மடுவு பகுதியில் ரவுண்டானா உள்ளது. இந்த பகுதியில் ஈரோடு, மேட்டூர், சத்தியமங்கலம் ஆகிய 3 ரோடுகள் சந்திக்கும் இடத்தில் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த தட்டிகளால் அந்த பகுதியில் வாகனங்கள் வருவது தெரிவதில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே விளம்பர தட்டிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.