திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வி.கைகாட்டி, விளாங்குடி கிராமங்கள். இந்த கிராமங்கள் கயர்லாபாத் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டதாகும். தேளூர் மின்வாரிய அலுவலகத்திற்கு கிழக்கு பகுதியில் அதிகளவில் ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகள் உள்ளன. வெளி மாவட்டத்திலிருந்து வி.கைகாட்டியிலுள்ள சிமெண்டு ஆலைக்கு தினமும் நெய்வேலியில் இருந்து அதிகளவில் நிலக்கரி ஏற்றி வரும் லாரிகளும், சிமெண்டு மூட்டைகள், ஜல்லிக்கற்கள் ஏற்றி வரும் லாரிகளும் 24 மணி நேரமும் விளாங்குடிமேடு பகுதியில் உள்ள பேக்கரி, ஓட்டல்கள் முன்பாக போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இரவு நேரங்களில் லாரிகளில் சிகப்பு நிற இண்டிகேட்டர் போடுவதில்லை. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி பல்வேறு விபத்துகள் நடக்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.