கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?

Update: 2022-08-30 13:27 GMT
பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூரில் இருந்து பெரம்பலூர் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவிலும், அரியலூர் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக அரியலூர் சென்று வருகின்றனர். ஆனால் அரியலூர் சென்று வர இருமுறை மட்டுமே பஸ் வசதி உள்ளது. அவையும் நிச்சயமாக தினமும் வருவதில்லை. இதனால் மருத்துவ, கல்வி, கட்டுமான, உணவு பொருட்கள் மற்றும் வெளியூர் செல்லும் தேவைகளுக்கு இலுப்பைக்குடி சென்று பின் அரியலூர் பஸ் பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள், முதியவர்கள் மற்றும் அவசர தேவை உள்ளோர் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாத்தனூரில் இருந்து அரியலூருக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்