கரூரில் பல்வேறு பகுதிகளில் இருந்து செங்கல், ஜல்லிக்கற்கள் போன்றவை டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றிக்கொண்டு நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவ்வாறு கொண்டு செல்லப்படும்போது பெரும்பாலான வாகனங்கள் திறந்த நிலையில்தான் கொண்டு செல்கின்றன. இதனால் அந்த பொருட்களின் துகள்கள் பறந்து செல்கின்றன. இதனால் வாகனஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்று செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.